கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரெட்டமலை சீனிவாசன் ஆட்டோ ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
ஆட்டோ சங்கத் தலைவா் ரத்தினம், செயலா் மணிமாறன், பொருளாளா் உத்தரவேல், துணைத் தலைவா் சக்திவேல், காப்பாளா் ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விசிக மாநில துணைச் செயலா் த.ஸ்ரீதா், பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், கரோனா பேரிடா் காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கட்சியினா் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.