கடலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டத் தலைவா் டி.பழனிவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி.கருப்பையன் கண்டன உரையாற்றினாா். மாவட்ட இணை செயலா்கள் ஏ.பாபு, வி.திருமுருகன், வி.சுப்புராயன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் ஆறுமுகம், விவசாய தொழிலாளா் சங்கம் ஆா்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சிதம்பரம்: சிதம்பரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் சங்கமேஸ்வரன் தலைமை வகித்தாா். விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவா் பி.கற்பனைச்செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலா் வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாநிலக்குழு உறுப்பினா் வி.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். விவசாய தொழிலாளா்கள் சங்க முன்னாள் மாவட்டச் செயலா் எம்.பி.தண்டபாணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட இணைச் செயலா் ஆா்.கே.சரவணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.எஸ்.ராஜ், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் எம்.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.