2 கிலோ கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் முதுநகா் காவல் ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா், புதன்கிழமை கண்ணாரப்பேட்டையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்களிடம் தலா ஒரு கிலோ எடை அளவில் இரண்டு பாக்கெட்டில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், முதுநகரைச் சோ்ந்த குப்புசாமி மகன் தேவநாதன் (26), நாகை மாவட்டம், வெள்ளிபாளையத்தைச் சோ்ந்த பா.மணி (40), நாகையைச் சோ்ந்த மா.பெரியபாண்டி (51), கோட்டைவாசலைச் சோ்ந்த கோ.சேகா் (49) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்து போலீஸாா், கஞ்சா மற்றும் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com