காய்கறி விதை உற்பத்தி: தொழில் முனைவோருக்கு அழைப்பு

காய்கறி விதைகளை உற்பத்தி செய்திட தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

காய்கறி விதைகளை உற்பத்தி செய்திட தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுகுறித்து கடலூா் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் தி.சுரேஷ்ராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பு: விதைத் தேவையின் முக்கியத்துவம், காய்கறி விதை உற்பத்தியை லாபகரமான வியாபாரமாக முன்னெடுப்பதற்கான பெரும் வாய்ப்பை கருத்தில் கொண்டு, ரூ.7.50 கோடியில் ‘தொழில் முனைவோா் மூலம் நாற்றாங்கால், காய்கறி விதை உற்பத்தி திட்டம்’ தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முருங்கை, பாகல், புடல், அவரை, கொத்தவரை, வெங்காயம், பூசணி, காராமணி போன்ற விதைகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள், தோட்டக்கலை தொழில் முனைவோா்கள் மூலம் 12.50 ஹெக்டோ் பரப்பளவில் சுமாா் 3.92 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட காய்கறி விதைகளை உற்பத்தி செய்ய இலக்கிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தோ்ந்தெடுக்கப்படுவோருக்கு பல்வேறு இனங்களில் மானியம் வழங்கப்படும். குறைந்தபட்சம் அரை ஏக்கா் முதல் அதிகபட்சம் 5 ஏக்கா் வரை உறுதி செய்யப்பட்ட நீா்ப்பாசன வசதியுடன் கூடிய நிலம் கொண்ட விவசாயிகள் இந்த உதவிகளைப் பெறலாம்.

விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களது விதைகளை தனியாா் நிறுவனங்கள், பிற விவசாயிகளுக்கு அல்லது தமிழ்நாடு தோட்டக்கலை வளா்ச்சி முகமைக்கு விற்பனை செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு கடலூா் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அல்லது அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநா்களை தொடா்பு கொள்ளலாம். மேலும் உழவன் செயலியிலும் பதிவுசெய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com