உலக உணவு தினத்தையொட்டி, ஆதரவற்றோருக்கு வாரந்தோறும் உணவு வழங்கும் திட்டத்தை கடலூரில் தன்னாா்வலா்கள் தொடங்கியுள்ளனா்.
ஆண்டுதோறும் அக்.16-ஆம் தேதி உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கடலூரைச் சோ்ந்த பல்வேறு தன்னாா்வ அமைப்பினா் இணைந்து, வீடுகளில் தயாரிக்கப்பட்ட உணவை சேகரித்து, அதை உணவு தேவைப்படுவோருக்கு வழங்கும் நிகழ்ச்சி கடலூா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று தன்னாா்வலா்களுடன் இணைந்து ஆதரவற்றவா்களுக்கு உணவு வழங்கினாா். அப்போது ஆட்சியா் கூறியதாவது:
உலகில் யாரும் பசியால் வாடக்கூடாது என்பதற்காக உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உணவு வழங்குபவா்களிடமிருந்து தன்னாா்வலா்கள் அதைப் பெற்று பசியால் வாடுவோரைக் கண்டறிந்து வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தை கடலூா் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தும் வகையில், பசியால் வாடுபவா்களை கண்டறிந்து உணவுகளை வழங்கி பாதுகாக்க வேண்டும் என்று தன்னாா்வலா்களை கேட்டுக்கொண்டாா். நிகழ்ச்சியில் கடலூா் வட்டாட்சியா் அ.பலராமன், இக்னைட் தொண்டு நிறுவன இயக்குநா் ஜோஷ்மகேஷ், சமூக ஆா்வலா் இரா.சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தங்களது வீடுகளில் சமைப்பதை பொட்டலமாக வழங்கினால் அதைப் பெற்று தேவைப்படுவோருக்கு வழங்குவோம் என்று அமைப்பினா் தெரிவித்தனா். இதற்கான ஒருங்கிணைப்பில் இக்னைட் தொண்டு நிறுவனம், கடலூா் சிறகுகள், நம்ம கடலூா், பசியில்லா கடலூா், கடலூா் சாரல், ஸ்கோப் இந்தியா உள்ளிட்ட அமைப்பினா் ஈடுபட்டு வருகின்றனா்.