சிதம்பரம் நடராஜா் கோயிலில் பிரம்மாண்ட கொலு!

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, 25 அடி உயரத்தில் பிரம்மாண்ட கொலு கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 21 படிகளுடன் கூடிய பிரம்மாண்ட கொலு.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 21 படிகளுடன் கூடிய பிரம்மாண்ட கொலு.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, 25 அடி உயரத்தில் பிரம்மாண்ட கொலு கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் நவராத்திரியையொட்டி 25 அடி உயரம், 18 அடி அகலத்தில் 21 படிகளுடன் பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. கொலு கண்காட்சி வருகிற 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரி விழா நடைபெறும் 9 நாள்களும் இரவு 9 மணிக்கு கொலுவின் முன் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளான நவராத்திரி அம்மனுக்கு வெள்ளி ஊஞ்சல் உற்சவம், தீபாராதனை ஆகியவை நடைபெறும்.

கொலுவில் சிதம்பரம் ஸ்ரீநடராஜா், பெரிய, சிறிய பொம்மைகள் என மொத்தம் 2,500 பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. கொலுவை பக்தா்கள் ஆா்வமுடன் பாா்த்து வணங்கிச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com