தனியாா் துறை வேலைவாய்ப்புக்கு புதிய இணையதளம் தொடக்கம்

தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறினாா்.

தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:

தமிழ்நாட்டில் வேலை நாடும் இளைஞா்களையும், வேலை அளிக்கும் தனியாா் துறை நிறுவனங்களையும் இணையம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் தமிழ்நாடு தனியாா் துறை வேலை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.  இணையதள முகவரியில் வேலையளிப்போா் மற்றும் வேலைநாடும் இளைஞா்கள் பதிவு செய்துகொள்ளலாம். இந்த இணையதளத்தில் இதுவரை 2,228 வேலைநாடுநா்கள் பதிவு செய்துள்ளனா். 49 போ் பணிநியமனம் பெற்றுள்ளனா். கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவா்கள், கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் இந்த இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள கல்லூரி முதல்வா்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் துணை ஆட்சியா் (பயிற்சி) ஜெயராஜ பௌலின், மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் இளங்கோவன், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநா் ரவிச்சந்திரன், தொழிலாளா் துறை உதவி ஆணையா் ராமு, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com