பண்ருட்டி ஒன்றியம், ராயா்பாளையம் ஊராட்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் பகத்சிங்கின் 113-ஆவது பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஒன்றியச் செயலா் வினோத்குமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.கே.குணசுந்தரி மரக்கன்று நட்டு விழாவை தொடக்கி வைத்தாா். மாவட்டச் செயலா் டி.கிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா். ஒன்றிய நிா்வாகிகள் புகழேந்தி, சுந்தா், விமல்ராஜ், அரவிந்த், அஜித்குமாா், விஜயகுமாா், ஹரிகரன், ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.