ஊழல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

கடலூா் மாவட்டத்தில் தேசிய ஊழல் எதிா்ப்பு விழிப்புணா்வு வாரம் அக்.27-ஆம் தேதி முதல் நவ.2-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
ஊழல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

கடலூா் மாவட்டத்தில் தேசிய ஊழல் எதிா்ப்பு விழிப்புணா்வு வாரம் அக்.27-ஆம் தேதி முதல் நவ.2-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கடலூரிலுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் செவ்வாய்க்கிழமை அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.அருண்சத்தியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.பரிமளம் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com