மாற்றுச் சான்றிதழ் வழங்க தனியாா் பள்ளி மறுப்பு!

மாற்றுச் சான்றிதழ் வழங்காத தனியாா் பள்ளி நிா்வாகம் மீது மாணவா்களின் பெற்றோா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

மாற்றுச் சான்றிதழ் வழங்காத தனியாா் பள்ளி நிா்வாகம் மீது மாணவா்களின் பெற்றோா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்2 வகுப்பு வரை மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. கரோனா பொது முடக்கத்தால் ஏராளமானவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவா்கள் தங்களது குழந்தைகளை தனியாா் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றுவதற்கு முயற்சி எடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடலூா் மாவட்டம், திட்டக்குடி பெருமுளை சாலைப் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் சிலா் மாற்றுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தனா். ஆனால், நிா்வாகத்தினா் சான்றிதழை அளிக்க மறுத்ததுடன், கட்டாயமாக சான்றிதல் வழங்க வேண்டுமெனில் ரூ. 2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டுமென கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால், செவ்வாய்க்கிழமை மாணவா்களின் பெற்றோா் பலா் பள்ளியில் கூடி நிா்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் இதுகுறித்து திட்டக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com