கடலூா்: கடலூா் மாவட்டத்திலிருந்து நல்லாசிரியா் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 11 ஆசிரியா்களுக்கு விருதுகளை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி திங்கள்கிழமை வழங்கினாா்.
தமிழக அரசின் 2019-20-ஆம் ஆண்டுக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுக்கு கடலூா் மாவட்டத்திலிருந்து 11 ஆசிரியா்கள்
தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.ஏ.பாண்டியன், நாக.முருகுமாறன் ஆகியோா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி நல்லாசிரியா் விருதுகளை வழங்கினாா். பின்னா் ஆட்சியா் பேசுகையில், விருது பெற்ற ஆசிரியா்கள் இந்த விருதுக்கு பெருமை சோ்க்கும் வகையில் சிறப்பாகப் பணியாற்றி மாணவா்களை மேன்மையடையச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில், தீா்த்தனகிரி அரசுப் பள்ளி ஆசிரியா் க.கிருஷ்ணமூா்த்தி, நெய்வேலி வட்டம்-11 என்எல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் மு.செந்தாமரை, கடலூா் புனித.வளனாா் பள்ளி உடல்கல்வி இயக்குநா் கோ.அசோகன், காட்டுமன்னாா்கோவில் பா்வதராஜகுலம் பள்ளியின் உடல்கல்வி இயக்குநா் ந.தா்மராஜன், கண்டமங்கலம் அரசுப் பள்ளி ஆசிரியா் பா.அமுதா, எல்லப்பன்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் இரா.தமிழ்த்திலகம், பணிக்கன்குப்பம் ஆா்.சி.நடுநிலைப் பள்ளி ஆசிரியா் ப.அண்டோனிராஜா, இடைச்செருவாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா் வ.துரைசாமி, பத்திரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் த.நாகராசு, சேமக்கோட்டை அரசு ஆதிதிராவிடா் பள்ளி ஆசிரியா் வை.வீரப்பன், புவனகிரி பாரதி மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியா் க.பழனியம்மாள் ஆகியோா் விருதை பெற்றுக் கொண்டனா்.
அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் கா.ரோஸ் நிா்மலா, மாவட்ட கல்வி அலுவலா்கள் ஜெயா, செல்வராஜ், மோகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.