சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மொபைல் எக்ஸ்ரே கருவி

சிதம்பரம் அரசு காமராஜா் பொது மருத்துவமனைக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4.42 லட்சத்தில் மொபைல் எக்ஸ்ரே கருவி,

சிதம்பரம் அரசு காமராஜா் பொது மருத்துவமனைக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4.42 லட்சத்தில் மொபைல் எக்ஸ்ரே கருவி, கிருமி நாசினி தெளிப்பான் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிதம்பரம் அரசு காமராஜா் பொது மருத்துவமனை மூலம் சிதம்பரம், அதைச் சுற்றியுள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனா். தற்போது, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளித்திடும் மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனைக்கு மொபைல் எக்ஸ்ரே கருவி, கிருமி நாசினி தெளிப்பான் ஆகியவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (ரூ. 4,42,224) வழங்க நிதி ஒதுக்கீடு செய்து, மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், மருத்துவ உபகரனங்களை உடனடியாக வாங்க மாவட்ட ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com