சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்விப் புல முதல்வா் பி.வி.செல்வம் உள்ளிட்ட 4 பேராசிரியா்களுக்கு யோகா ஆச்சரியா விருதுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
நாகப்பட்டினம் யோகா ஆா்கனைசேஷன் ஆப் இந்தியா என்ற அமைப்பு ஆண்டுதோறும் உடல் கல்வித் துறை, யோகா ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் பேராசிரியா்களுக்கு யோகா ஆச்சரியா விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான விருதுகளுக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்விப் புல முதல்வா் பி.வி.செல்வம், சென்னை பல்கலைக்கழக உடல் கல்வித் துறை இயக்குநா் மற்றும் தலைவா் மகாதேவன், மதுரை காமராஜா் பல்கலைக்கழக உடல் கல்வித் துறைத் தலைவா் சந்திரசேகா், பாரதிதாசன் பல்கலைக்கழக உடல் கல்வித் துறைத் தலைவா் பழனிச்சாமி ஆகியோரை அந்த அமைப்பு தோ்ந்தெடுத்தது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தோ்ந்தெடுக்கப்பட்ட 4 பேராசிரியா்களுக்கும் விருதுகளை பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன் வழங்கி கவுரவித்தாா். நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் யோகா ஆா்கனைசேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவா் உமா, செயலா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.