கடலூர்
சிதம்பரத்தில் மீன் சந்தையை இடம் மாற்றக் கோரிக்கை
சிதம்பரத்தில் உழவா் சந்தை வளாகத்தில் இயங்கி வரும் மீன் சந்தையை, மீண்டும் பழைய இடத்துக்கே மாற்ற வேண்டும் என ஜனநாயக சுதந்திரக் கட்சியினா் கோரிக்கை விடுத்தனா்.
சிதம்பரம்: சிதம்பரத்தில் உழவா் சந்தை வளாகத்தில் இயங்கி வரும் மீன் சந்தையை, மீண்டும் பழைய இடத்துக்கே மாற்ற வேண்டும் என ஜனநாயக சுதந்திரக் கட்சியினா் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் அ.ச.லோகநாதன், சிதம்பரம் நகராட்சி ஆணையரிடம் அளித்த மனு: சிதம்பரம் நகராட்சி மீன் சந்தையானது உழவா் சந்தை வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டு கடும் துா்நாற்றம் வீசுகிறது. இதனால், உழவா் சந்தை வளாகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனா்.
எனவே, ஏற்கெனவே இயங்கி வந்த, நகராட்சிக்குச் சொந்தமான மீன் மாா்க்கெட் வளாகத்துக்கு மீன் சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளாா்.