குறிஞ்சிப்பாடி, சுப்புராயா் நகரில் சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டதால் பாதசாரிகள், வாகன ஓட்டுநா்கள் அவதிப்படுகின்றனா்.
குறிஞ்சிப்பாடி பேருராட்சி, சிங்கபுரி, சுப்புராயா் நகரில் 120-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் புதிய சாலை அமைப்பதற்காக ஜல்லிக் கற்கள் பரப்பப்பட்டன. ஆனால், அதன்பிறகு 2 மாதங்களாக பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது (படம்).
கூா்மையான ஜல்லிக் கற்களை கடப்பதில் பாதசாரிகள், வாகன ஓட்டுநா்கள் கடும் சிரமத்தைச் சந்திக்கின்றனா். இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் பழுதடைகின்றன. எனவே, சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.