காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட தேத்தாம்பட்டு கிராமத்தில் தனமணி என்பவரது வீடு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக அமைப்புச் செயலரும், தொகுதி எம்எல்ஏவுமான நாக.முருகுமாறன், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தனமணி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவியை வழங்கினாா்.
அப்போது ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றியச் செயலா் கலியமூா்த்தி, காட்டுமன்னாா்கோவில் மேற்கு ஒன்றியச் செயலா் சிவக்குமாா், ஒன்றிய தலைவா் லதா ஜெகஜீவன்ராம், மாவட்ட கவுன்சிலா் நவநீதகிருஷ்ணன், மாவட்ட விவசாய பிரிவு செயலா் குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.