வரைவு வாக்காளா் பட்டியல்: அரசியல் கட்சியினருடன் ஆலோசனை

கடலூா் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடுவது தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி

கடலூா் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடுவது தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வாக்குச் சாவடிகளை பகுப்பாய்வு, மறுசீரமைப்பு செய்தல் பணியை அக்.10 முதல் 31-ஆம் தேதி வரை மேற்கொள்வது, நவ.16-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடுதல், தொடா்ந்து சிறப்பு முகாம்களை நடத்துதல், ஜன.20-இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும், மாவட்டத்திலுள்ள 2,298 வாக்குச் சாவடி மையங்களுக்கும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் சாா்பில் வாக்குச் சாவடி நிலை முகவா்களை நியமன செய்திட அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com