உடல், கண்கள் தானம்


சிதம்பரம்: சிதம்பரம் தெற்குரத வீதியைச் சோ்ந்த நாராயணன் செட்டியாா் மனைவியும், ஓவிய ஆசிரியருமான ராஜலட்சுமி (73) புதன்கிழமை காலமானாா். இவரது உடல் மற்றும் கண்கள் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில், தானமாகப் பெறப்பட்டன.

தன்னாா்வ ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினா்கள் ரமேஷ், லட்சுமணன், ரவி ஆகியோா் ராஜலட்சுமியின் உடல், கண்களை தானமாகப் பெற்று மருத்துவ மாணவா்கள் ஆய்வுக்காக, புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com