தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, கடலூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் து.பாலு தலைமை வகித்தாா். முற்போக்கு சிந்தனையாளா் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் கு.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா்.
தமிழ்நாடு மீனவா் பேரவை மாநிலச் செயலா் கஜேந்திரன், கடலூா் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வெண்புறா சி.குமாா், தலைவா் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்.) மாவட்ட அமைப்பாளா் நாகமணி, மாவட்டக் குழு உறுப்பினா் கோவிந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் பரிதிவாணன், காா்த்திகேயன், செல்வம், சாய்ராம், மாதவன், சுகுமாறன், வேலவன், வெங்கடேசன் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்த ரவி, ஆனந்தி, பாலாஜி மணிவாசகம், செந்தில், ஷகிலா உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.