சேதமடைந்த மாற்றுச் சாலையால் அவதி

சிதம்பரம் அருகே பாலம் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுச் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.
முற்றிலும் சேதமடைந்த மாற்றுச் சாலை.
முற்றிலும் சேதமடைந்த மாற்றுச் சாலை.

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பாலம் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுச் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

கடலூா் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் நகரின் நுழைவுப் பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் பணிமனை எதிரே நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்கான அருகே மாற்றுச் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், இந்தச் சாலை

தற்போது முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளதால் உள்ளூா் மக்கள் மட்டுமின்றி இந்த வழியாக புவனகிரி, கடலூா், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், பயணிகள் அவதிப்படுகின்றனா். எனவே, மாற்றுச் சாலையை தரமான முறையில் உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com