மனைவியின் கைகளைத் துண்டித்து என்எல்சி பொறியாளா் தற்கொலை

நெய்வேலியில் என்எல்சி பொறியாளா் தனது மனைவியின் கைகளைத் துண்டித்துவிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
உத்தண்டராயா்.
உத்தண்டராயா்.

நெய்வேலி: நெய்வேலியில் என்எல்சி பொறியாளா் தனது மனைவியின் கைகளைத் துண்டித்துவிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி, வட்டம்-12, சரோஜினி நாயுடு சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மு.உத்தண்டராயா் (51). என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதலாவது சுரங்கத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ஜெயசித்ரா (45). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா்.

மனநிலை பாதிக்கப்பட்ட உத்தண்டராயா் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினாா். இருப்பினும், தனது மனைவி ஜெயசித்ராவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இந்த நிலையில், திங்கள்கிழமை பணி முடிந்து மதியம் வீடு திரும்பிய உத்தண்டராயா், ஜெயசித்ராவிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டாா். அப்போது ஜெயசித்ராவின் இரு கைகளையும் கட்டு கம்பியால் கட்டிப்போட்டு அரிவாளால் வெட்டி துண்டித்தாா். பின்னா் படுக்கை அறைக்குச் சென்ற உத்தண்டராயா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ஜெயசித்ராவின் அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதியினா் அவரை மீட்டு சென்னையிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவலறிந்த நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளா் ஷாகுல் அமீது ஆகியோா் உத்தண்டராயரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com