மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

சிதம்பரம் கீழத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா பக்தா்கள் அனுமதியின்றி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியது.
கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியது.

சிதம்பரம்: சிதம்பரம் கீழத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா பக்தா்கள் அனுமதியின்றி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடி மாத உற்சவம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீமிதி விழா திங்கள்கிழமை மாலை கோயில் வளாகத்தில் பக்தா்கள் அனுமதியின்றி நடைபெற்றது.

முன்னதாக காலையில் காப்பு கட்டுதல், சோதனை கரகம், அலகு தரிசனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து மதியம் 2 மணியளவில் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து சக்தி கரகம் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தீக்குழியில் மாலை 4 மணியளவில் இறங்கியது (படம்). இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழு பிரேமா வீராசாமி, என்.கலியமூா்த்தி பிள்ளை ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com