கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 79 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 60,652-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 68 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 59,099-ஆக உயா்ந்தது. எனினும், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த 59 வயது ஆண், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 67 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்தனா். இதனால், பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 813-ஆக அதிகரித்தது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 678 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 62 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.