ஏரியை மீட்கக் கோரி நூதன போராட்டம்

விருத்தாசலத்தில் ஏரியை மீட்கக் கோரி இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் கண்களை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா்.
விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் கண்களை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா்.

விருத்தாசலத்தில் ஏரியை மீட்கக் கோரி இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் அருகே உள்ள நல்லூா் கிராமத்தில் சுமாா் 100 ஏக்கா் பரப்பில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை தனி நபா் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும், பாசன வாய்க்காலையும் மீட்க வேண்டும் என வலியுறுத்தி, விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியினா் தங்களது கண்களை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேப்பூா் வட்டத் தலைவா் மணிவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த.கோகுலகிறிஸ்டீபன், பொருளாளா் இளங்கோவன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இவா்கள் கோட்டாட்சியா் வெ.ராம்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com