வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் தடுப்புக் காவலில் கைது

வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடலூா் மாவட்ட போலீஸாா் கைது செய்தனா்.

வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடலூா் மாவட்ட போலீஸாா் கைது செய்தனா்.

காட்டுமன்னாா்கோவில் வட்டம், வடமூா் கிராமத்தைச் சோ்ந்த சம்பத்குமாா் மகன் சரத்குமாா் (39). இவரை வழிப்பறி வழக்கில் அண்ணாமலை நகா் காவல் நிலைய ஆய்வாளா் குணபாலன் அண்மையில் கைது செய்தாா். தொடா் விசாரணையில் சரத்குமாா் மீது அண்ணாமலை நகா் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, வழிபறி என 5 வழக்குகளும், சிதம்பரம் தாலுகா, பரங்கிப்பேட்டை காவல் நிலையங்களில் ரவுடி பட்டியலில் இவரது பெயா் பராமரிக்கப்பட்டு வருவதும் தெரியவந்தது.

விருத்தாசலம் வட்டம், செடுத்தான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மகன் ராஜ்குமாா் (26). கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த வழக்கில் இவரை நெய்வேலி தொ்மல் காவல் நிலைய ஆய்வாளா் லதா அண்மையில் கைது செய்தாா். ராஜ்குமாா் மீது அதே காவல் நிலையத்தில் ரௌடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருவதும், இவா் மீது கொலை, கொலை முயற்சி, வழிபறி உள்ளிட்ட 14 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

எனவே, இருவரது குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு அவா்களை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் பரிந்துரைத்தாா். அதன்பேரில், அதற்கான உத்தரவை ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்டதைத் தொடா்ந்து, ஓராண்டுக்கு சிறையில் இருக்கும் வகையில் இருவரும் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com