பைக்குகள் பறிமுதல்: இளைஞா் கைது

நெய்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் 6 பைக்குகள் திருடியதாக இளைஞரை நெய்வேலி நகரிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் 6 பைக்குகள் திருடியதாக இளைஞரை நெய்வேலி நகரிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி நுழைவு வாயில் பகுதியில் நெய்வேலி நகரிய போலீஸாா் வாகனத் தணிக்கை செய்தனா். அப்போது, சந்தேகப்படும்படி பைக்கில் வந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில், நெய்வேலி அருகே உள்ள ஆத்திரிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் சுந்தரபாண்டியன் (27) என்பதும், அவா் ஓட்டி வந்த பைக் திருடப்பட்டதும் தெரிய வந்தது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் 5 பைக்குகள் திருடியதை அவா் ஒப்புக் கொண்டாராம்.

இதையடுத்து, போலீஸாா் 6 பைக்குகளைப் பறிமுதல் செய்து, சுந்தரபாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com