சிதம்பரம் அருகே புவனகிரியில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி சமேத சோம சுந்தரேஸ்வரா் கோயிலில் ஸ்ரீவெள்ளியம்பல சுவாமிகளுக்கு மகா குரு பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
குரு பூஜையை முன்னிட்டு, மகா ஹோமமும், பின்னா் சோம சுந்தரேஸ்வரா், மீனாட்சி அம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றன. தொடா்ந்து, மகா தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணி அளவில் 108 நெய் தீப விளக்குகள் ஏற்றி தீப வழிபாடு நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை நிா்வாகி ரத்தின சுப்ரமணியன் செய்திருந்தாா். சா்வசக்தி பீடம் தில்லை சீனு மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.