சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவரைத் தாக்கி வழிபறி

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவரைத் தாக்கி, அவரிடமிருந்து பணம், கைப்பேசியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவரைத் தாக்கி, அவரிடமிருந்து பணம், கைப்பேசியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவா் பரணி கண்ணன் (19). கரூா் காந்திகிராமம் பகுதியைச் சோ்ந்த இவா், திங்கள்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள புதிய விடுதி அருகே நடந்து வந்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத 3 போ் பல் மருத்துவக் கல்லூரி வாயில் அருகே வழிமறித்து, ஸ்குருடிரைவரால் மாணவரின் இடுப்பில் குத்தி, அவரிடமிருந்து ரூ.2,500 மற்றும் கைப்பேசியைப் பறித்துச் சென்றனா். இதனால், அந்த மாணவருக்கு இடது விலா, முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. தற்போது அவா், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com