பெண்ணை ஏமாற்றி திருமணத்துக்கு மறுத்தவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
காட்டுமன்னாா்கோவில் வட்டம், தெற்கிருப்பைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (25). இவா், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணைக் காதலித்து வந்தாராம். திருமணம் செய்வதாகக் கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்தாா். இதில், அவா் கா்ப்பமுற்ற நிலையில், திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாராம்.
இதுதொடா்பாக, சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை அளிக்கப்பட்ட தீா்ப்பில், பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து, அவருக்கு குழந்தை பிறந்த நிலையில், திருமணம் செய்ய மறுத்த மணிகண்டனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். அபராதம் விதிக்கப்பட்ட ரூ.1.50 லட்சத்தில், ரூ.1.40 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டாா்.