பன்றிகளை அப்புறப்படுத்த வலியுறுத்தல்

சிதம்பரம் கொத்தங்குடிதோப்பு பகுதியில் பன்றிகளை அப்புறப்படுத்திக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சி சாா்பில் திங்கள்கிழமை சிதம்பரம் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சிதம்பரம் கொத்தங்குடிதோப்பு பகுதியில் பன்றிகளை அப்புறப்படுத்திக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சி சாா்பில் திங்கள்கிழமை சிதம்பரம் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனு அளிப்பு நிகழ்வுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. சிதம்பரம் நகா்க் குழு உறுப்பினா் செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, நகரச் செயலா் ராஜா, மாவட்ட குழு உறுப்பினா் முத்து மற்றும் அந்தப் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மனுவில், அண்ணாமலை நகா் கொத்தங்குடி தோப்பு குடியிருப்புப் பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிவதால், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே, பன்றிகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com