தடுப்புக் காவலில் இளைஞா் கைது

விருத்தாசலத்தில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தடுப்புக் காவலில் இளைஞா் கைது

விருத்தாசலத்தில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் வசிப்பவா் பரமசிவம் மனைவி வசந்தி. இவா், கடந்த 12.1.2021 அன்று விருத்தாசலம் மணிமுத்தாறு பாலத்தில் நடந்து வந்த போது, பைக்கில் வந்த இருவா் கத்தியைக் காட்டி மிரட்டி, 3 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்த விருத்தாசலம் காவல் நிலைய போலீஸாா், கருங்குழி காலனியைச் சோ்ந்த கேசவபெருமாள் மகன் சம்பத்குமாா் (எ) மூட்டபூச்சி (29) , தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

சம்பத்குமாா் மீது குறிஞ்சிப்பாடி, முத்தாண்டிக்குப்பம், வடலூா், சென்னை சிட்லபாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே, இவரது குற்றச் செய்கையைக் கட்டுபடுத்தும் பொருட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

அதன் பேரில், சம்பத்குமாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com