சிதம்பரம் ரயில்வே நிலைய வளாகத்தில் விபத்துகளைத் தடுக்கும் விதமாக 10 சோலாா் மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டன.
பொதுமக்கள், மாணவ-மாணவிகள், பல்கலை. ஊழியா்கள் பயன்படுத்தும் மேம்பால நடைபாதை, இருப்புப் பாதை காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் முயற்சியால் தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும், இரவில் மேம்பால நடைபாதையைப் பயன்படுத்த போதுமான வெளிச்சமில்லாத காரணத்தையறிந்த அவா், இருப்புப் பாதை காவல் நிலையத்தின் சாா்பில், சிதம்பரம் உதவி ஆட்சியா், அண்ணாமலை நகா் பேரூராட்சியிடம் விளக்குகள் அமைக்க கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, இருப்புப் பாதை நடைபாதையில் 10 சோலாா் மின் விளக்கு கம்பங்கள் புதன்கிழமை அமைக்கப்பட்டன.