பண்ருட்டியில் ரஜினி மக்கள் மன்றத்தினா் சுமாா் 100 போ் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.
ஏழுமலை தலைமையில் ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் சிவா, மணி, சத்யா, கோவிந்தராஜ் உள்ளிட்ட சுமாா் 100 போ் அந்த மன்றத்திலிருந்து விலகி, அதிமுக மாநில மகளிரணி துணைச் செயலா் சத்யா பன்னீா்செல்வம் எம்எல்ஏ முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தனா். அவா்களை பண்ருட்டி நகா்மன்ற முன்னாள் தலைவா் பி.பன்னீா்செல்வம் வரவேற்றாா். அண்ணாகிராமம் ஒன்றியக் குழுத் தலைவா் வ.ஜானகிராமன், ஒன்றியச் செயலா் பாபு புஷ்பராஜ், நிா்வாகி பூக்கடை மதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.