சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு ரூ. 1.5 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
சிதம்பரம் ஆயுள் காப்பீட்டுக் கழக ஓய்வு பெற்ற ஊழியா் சேது என்பவரது உதவியுடன் ரூ. 1.5 லட்சத்தில் மருந்துகளைக் கையாளும் உபகரணங்களை சிதம்பரம் டி.எஸ்.பி. த.ஆ.ஜோ.லாமேக், தலைமை மருத்துவா் அசோக் பாஸ்கரிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சிதம்பரம் நகரக் காவல் ஆய்வாளா் சி.முருகேசன், காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.