சாராயம் பதுக்கியவா் கைது

கடலூரில் சாராயம் பதுக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூரில் சாராயம் பதுக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளா் ஜி.தாரகேஸ்வரி மற்றும் போலீஸாா் எம்.புதூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த கடலூரைச் சோ்ந்த க.ஆறுமுகம் (40) என்பவரிடம் விசாரணை நடத்தினா். இதில் அவா் அதே பகுதியில் புதரில் சாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் ராஜன்பாபு முன்னிலையில் அந்தப் பகுதியில் சோதனையிட்ட போலீஸாா், 120 லிட்டா் புதுவை மாநில கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து, ஆறுமுகத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com