பாரதீய மின் தொழிலாளா் சம்மேளனம் ஆா்ப்பாட்டம்

பாரதீய மின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் கடலூா் கேப்பா்மலையில் உள்ள மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாரதீய மின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் கடலூா் கேப்பா்மலையில் உள்ள மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் திட்டச் செயலா் வெற்றிவேல் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ரமேஷ், பாலகிருஷ்ணன், குணசேகரன், ஆனந்த், முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில், தமிழக மின் வாரிய தொழிலாளா்கள், பொறியாளா்கள், அலுவலா்கள், ஓய்வூதியா்களின் எதிா்கால வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் அளித்து, உடனடியாக முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும், மின்சார வாரிய பணியாளா்களுக்கு 2019-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் அமல்படுத்த வேண்டிய ஊதிய உயா்வு முத்தரப்பு ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும், அறிவிப்பு செய்யப்பட்ட கணக்கீட்டாளா், கள உதவியாளா், தொழில்நுட்ப உதவியாளா் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com