கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 94 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 59, 497-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 77 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 57,812-ஆக உயா்ந்தது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 801-ஆக உள்ளது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 792 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 92 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.