மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகிகள் கூட்டம்
நெய்வேலியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகா் குழு உறுப்பினா் மணிமாறன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா் திருஅரசு, நகரச் செயலா் பாலமுருகன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் வேல்முருகன், ஜெயராமன், மீனாட்சிநாதன், மேரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணி மிகவும் மந்த நிலையில் நடைபெறுவதைக் கண்டிப்பது, இதுதொடா்பாக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது, மதுரை, திருச்சி மாநகரங்களில் இருந்து வரும் அரசுப் பேருந்துகள் நெய்வேலி நகரிய பேருந்து நிலையத்துக்கு வந்துச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நெய்வேலியில் இருந்து அதிகாலையில் சென்னை செல்லும் 199 வழித்தட பேருந்துகள் செங்கல்பட்டு, தாம்பரம் வழியாகச் செல்லாமல் நேரடியாக சென்னை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.