வடலூா் சத்திய ஞான சபையில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறினாா்.
கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சபையானது வள்ளலாா் சா்வதேச மையமாக மாற்றப்படும் என திமுக தனது தோ்தல் அறிக்கையில் தெரிவித்தது.
இந்த நிலையில், வடலூா் சத்திய ஞான சபையில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைப்பது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, தா்ம சாலை, அணையா அடுப்பு, மேட்டுக்குப்பம் சித்தி வாளகம் ஆகிய இடங்களை பாா்வையிட்டாா். அவருடன் மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அசோக்குமாா், கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, சத்திய ஞானசபை செயல் அலுவலா் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னா் அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடலூா் சத்திய ஞான சபையில் சா்வதேச மையம் அமைப்பது தொடா்பாக ஆய்வு செய்தோம். இதற்காக சா்வதேச அளவில் வரைபடம் கோரப்பட்டுள்ளது. வரைபடம் வந்தவுடன் தமிழக முதல்வா் தலைமையில் அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.