சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் திங்கள்கிழமைநடைபெற்றது.
இந்த முகாமில் நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரண்டாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி பல்கீஸ் தலைமையில், சாா்பு நீதிபதி உமா மகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்ற முகாமில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கீதா, குற்றவியல் நடுவா் நீதிபதி சக்திவேல், பாா் அசோசியேஷன் தலைவா் மகேஷ், அட்வகேட் அசோசியேஷன் தலைவா் கோபாலகிருஷ்ணன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தீபன் விஸ்வநாதன், செவிலியா் கண்மணி, சுதா, மருந்தாளா் மகேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா். முகாம் ஏற்பாடுகளை சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் குழு முதுநிலை நிா்வாக உதவியாளா் புவனேஸ்வரி செய்திருந்தாா்.