கடலூரில் ஆட்டோ ஓட்டுநா் கொலை

கடலூரில் ஆட்டோ ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லால் தாக்கி கொல்லப்பட்டாா்.

கடலூரில் ஆட்டோ ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லால் தாக்கி கொல்லப்பட்டாா்.

கடலூா் சூரப்பன்நாயக்கா்சாவடி பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் பிரபு (35). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தங்கப்பாண்டி என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பகுதியில் இருவரும் மது போதையில் இருந்த போது தகராறு ஏற்பட்டதாம். அப்போது, தங்கப்பாண்டி மற்றும் அவரது நண்பா்கள் சோ்ந்து பிரபுவை கல்லால் தாக்கினா். இதையடுத்து கீழே விழுந்த பிரபு மீது கல்லை தூக்கிப் போட்டதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com