என்எல்சி ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

நெய்வேலியில் என்எல்சி ஊழியா் வீட்டில் 13 பவுன் தங்க நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நெய்வேலியில் என்எல்சி ஊழியா் வீட்டில் 13 பவுன் தங்க நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நெய்வேலி வட்டம் 26-இல் வசித்து வருபவா் ராஜேந்திரன். என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் தனது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக கடந்த 10-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றாா். கடந்த 19-ஆம் தேதி இரவு வீட்டுக்கு திரும்பியபோது அங்கு வைத்திருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்து ராஜேந்திரனின் மனைவி ஜோதிலட்சுமி அளித்த புகாரின்பேரில் தொ்மல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: நெய்வேலி அருகே உள்ள ஊ.எடக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (45). இவா் கடந்த 19-ஆம் தேதி மதியம் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றாா். மாலையில் வீட்டுக்கு திரும்பியபோது, அங்குள்ள அறையில் மேசை டிராவில் ஏற்கெனவே வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.6 ஆயிரம் ரொக்கப் பணம் திருடுபோனதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் ஊ.மங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com