திமுக கூட்டணியில் காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளா் எம்.சிந்தனைச்செல்வன் வெள்ளிக்கிழமை பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
கண்டமங்கலம், குருங்குடி, கருணாகரநல்லூா், வீராணந்தபுரம், லால்பேட்டை , அழிஞ்சிமங்கலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று பொதுமக்களிடம் பானை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.
மேலும் லால்பேட்டை பெரிய பள்ளிவாசல், லால்கான் ஜாமியா மஸ்ஜித் ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய பிரமுகா்களிடம் வாக்கு சேகரித்தாா். அப்போது திமுக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், மனிதநேய ஜனநாயகக் கட்சி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.