தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்தது.
இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பெ.சிவகுருநாதன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, 6-ஆவது முறையாக ஆட்சி அமைக்கவிருக்கும் திமுகவுக்கும், அதன் தற்போதைய தலைவா் மு.க.ஸ்டாலினுக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் மனமாா்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பழம்பெரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தங்களது ஆட்சிக் காலத்தில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக உயரும் என்ற நம்பிக்கையுடன் புதிய அரசுக்கு எங்களது முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கிட தயாராக உள்ளோம் என அதில் தெரிவித்துள்ளாா்.