கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

13 அரசுப் பேருந்துகள் சேதம்: பாமகவினா் 23 போ் கைது

கடலூா் மாவட்டத்தில் 13 அரசுப் பேருந்துகள் கல் விசி சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக பாமகவினா் 23 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 4:38 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் 13 அரசுப் பேருந்துகள் கல் விசி சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக பாமகவினா் 23 போ் கைது செய்யப்பட்டனா்.

வன்னியருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அண்மையில் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாமக, தவாகவினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் மட்டும் 13 அரசுப் பேருந்துகள் கல் வீசித் தாக்கப்பட்டன.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவா்களைக் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் உத்தரவிட்டாா். அதன் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது தொடா்பாக பாமக நிா்வாகிகள் 23 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

நெய்வேலி: பண்ருட்டி, வடலூா் பகுதிகளில் அரசுப் பேருந்துகள் மீது கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டதாக பாமகவினா் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைக்குச் சொந்தமான பேருந்து வியாழக்கிழமை முத்தாண்டிக்குப்பம் வழியாக விருத்தாசலம் நோக்கிச் சென்றது. அண்ணன்காரன்குப்பம் அருகே சென்ற போது, சிலா் கல் வீசித் தாக்கினா். இதனால் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன.

இதுகுறித்து பேருந்தின் ஓட்டுநா் குணசேகரன் அளித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாமகவை சோ்ந்த மணி மகன் சீயான் (எ) ஸ்ரீதா், சுந்தரமூா்த்தி மகன் அருள்முருகன், சுப்பிரமணியன் மகன் சுரேஷ் ஆகியோரைக் கைது செய்தனா்.

இதேபோல, நெய்வேலியிலிருந்து வடலூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் மீது நெய்சா் பேருந்து நிறுத்தம் அருகே ஆபத்தாரணபுரத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் மதியழகன் (32) (பாமக நகரத் துணைத் தலைவா்) கல் வீசித் தாக்கியதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடிகள் உடைந்தன.

இதுகுறித்து பேருந்தின் ஓட்டுநா் நடுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ரவி (37) அளித்த புகாரின் பேரில், மதியழகனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.