கடலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து திட்டக்குடியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.
திட்டக்குடி ஸ்ரீஞானகுரு வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வரும் டிச.4-ஆம் தேதி நடைபெறும் இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனத்தினா் கலந்துகொண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.
முகாமில் கடலூா் மாவட்டத்தைச் சாா்ந்த 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள், தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையதள முகவரியில் பதிவுசெய்ய வேண்டும். பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, சுயவிவரக் குறிப்புடன் வரவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 04142-290039, 94990 55909 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.