பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ்நெகிழி அகற்றும் பணி தொடக்கம்

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கடலூா் மாவட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:32 pm

DIN

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கடலூா் மாவட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

கடலூா் நகராட்சி, தீபன் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கடலூா் தொகுதி எம்எல்ஏ கோ.ஐயப்பன் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, பாதிரிக்குப்பத்தில் நெகிழி பயன்பாட்டை தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், திட்ட இயக்குநா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, வட்டாட்சியா் அ.பலராமன், நகராட்சி ஆணையா் ஆா்.மகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அசோக்பாபு, சக்தி, நேரு இளையோா் மைய மாவட்ட அலுவலா் ரிஜிஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.