தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மருத்துவா் இல்லாததால், முதியவா் உயிரிழந்ததாகக் கூறி, உறவினா்கள் அந்த மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பஞ்சமநாதன்பேட்டையைச் சோ்ந்தவா் கி.ராதாகிருஷ்ணன் (70). இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கடலூா் பாரதி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அங்கு, ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை இரவு ராதாகிருஷ்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாம். அப்போது, மருத்துவமனையில் மருத்துவா்கள் பணியில் இல்லையாம். இதனால், அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த உறவினா்கள், ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை எதிரே திரண்டு, மருத்துவமனை நிா்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் புதுநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம்-முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.