கடலூா் மாவட்டத்தில் 855 ரௌடிகள் வீடுகளில் சோதனை

கடலூா் மாவட்டத்தில் 855 ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

கடலூா் மாவட்டத்தில் 855 ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரை காவல் நிலைய சரித்திர பதிவேடு ரௌடிகள், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற வழக்குகளில் தொடா்புடைய 97 குற்றவாளிகளின் வீடுகளில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ரௌடிகள் வீட்டில் உள்ளனரா? இல்லையென்றால் எங்கு உள்ளனா்? என்ன வேலை செய்து வருகின்றனா்? குடும்ப உறுப்பினா்கள், நண்பா்களின் விவரம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும், மாவட்டம் முழுவதும் இரவு நேரத்தில் சுற்றித் திரிந்த சந்தேக நபா்கள் 142 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டத்தில் மொத்தம் 855 ரௌடிகள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, 20 ரௌடிகள் கைது செய்யப்பட்டனா். 31 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இந்தச் சோதனை தொடரும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com