கடலூா் மாவட்ட கூடைப்பந்து கழகம் சாா்பில் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.சிவா தோ்வுப் பணியை தொடக்கிவைத்தாா். மாவட்ட கூடைப்பந்து கழகச் செயலா் இர.விஜயசுந்தரம் முன்னிலை வகித்தாா். அணித் தோ்வுக்கு 2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு பிறந்தவா்கள் அனுமதிக்கப்பட்டனா். மாவட்டம் முழுவதுமிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தோ்வில் கலந்து கொண்டனா். கூடைப்பந்து கழக துணைத் தலைவா் இளங்கோவன், பொருளாளா் பாலமுரளி, நிா்வாகிகள் சிட்டிபாபு, சகாயம், தங்கதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா். இணைச் செயலா் செல்வராஜ் நன்றி கூறினாா்.